காஞ்சிபுரம் அடுத்து உள்ள வையாவூர் சாலை பகுதியில் சொர்ணா நகர் மற்றும் அய்யன் திருவள்ளூர் குடியிருப்பு அமைந்துள்ளது. அப்பகுதியில் தெரு நாய்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் தெரு நாய்களுக்கு தினந்தோறும் உணவு அளிப்பது, பராமரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்,  இன்று தெரு நாய்கள் மர்மமான முறையில் ஆங்காங்கே இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், தெரு நாய்களுக்கு மர்ம நபர்களால் விஷம் வைத்து கொல்லப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும்



அப்பகுதி சிசிடிவி கேமிராக்கள் எதுவும் இல்லாததால் விசாரணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர். 


மேலும் படிக்க | திருப்பூர் நகரில் சிறுத்தை தாக்குதல்! தீவிரமாகும் கண்காணிப்பும் வேட்டையும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR