வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்தது.


சென்னையை பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் நகரில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


சென்னையில் அதிபட்சமாக 39 டிகிரி செல்சிசும், குறைந்த பட்சமாக 30 டிகிரி செல்சியசும் வெப்பம் நிலவும் என வானிலை ஆய்ல மையம் கூறியுள்ளது.