தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இது குறித்து சென்னை வானிலை மையம் கூறியுள்ளதாவது; 
கன்னியாகுமரி முதல் கடலோர தமிழகம் வழியாக தெற்கு ஆந்திரா வரை வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள திசை மாறுபாடு காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் அனேக இடங்களில் இயல்பை விட 3 அல்லது 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டம், பேச்சிப்பாறை மற்றும் சித்தார் பகுதிகளில் 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.