ரிங் மாஸ்டர் போல் செயல்பட நினைத்த தினகரன் மீது அவரது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மா.பொ. சிவஞானம் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது உருவசிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்தால் கட்சி தலைமை தான் அது குறித்து முடிவெடுக்கும் என தெரிவித்தார். 


மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரிங் மாஸ்டர் போல் செயல்பட நினைத்த தினகரன் மீது அவரது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர். சசிகலா, தினகரன் தவிர்த்து அமமுகவில் இருந்து யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். அமமுகவில் இருந்து பலரும் அதிமுகவிற்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.கொள்கை, கோட்பாடு, லட்சியம் என மூன்றும் இல்லாத தினகரனுக்கு மூன்று நாமம்தான் கிடைக்கும்.


தங்க தமிழ்ச்செல்வனை  அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்!. தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய யாரும் முட்டுக்கட்டையாக இருக்க மாட்டார்கள். அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பர் என யாரும் இல்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.