நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவ மழை மேலும் தீவிரம் அடைந்து வரும் நிலையில், நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இது குறித்து வானிலை ஆய்வு மையம் இயக்குனர் கூறுகையில்...! 


இந்திய வானிலை மையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதாலும், தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் தெற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியாலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவின் பெரும்பாலான இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.