சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் அது போன்ற முயற்சியில் நான் துளியும் ஈடுபடவில்லை. தமிழகத்தில் அதிமுக ஆட்சி தானாகவே கவிழும்.


எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல விவகாரங்களில் அதிமுக-வினர் இடையே கடும் போட்டா போட்டி நிலவுவதாக கூறினார். 


மேலும் அரிசி, பால் உள்ளிட்ட கலப்படங்களை தடுக்க ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.