69% இடஒதுக்கீடு முறைக்கு எதிரான இடைக்கால மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக சென்னையை சேர்ந்த மாணவர்கள் முத்து ராமகிருஷ்ணன், சத்திய நாராயணன் ஆகியோர் சார்பில் மருத்துவ மாணவர்களுக்கு 69% இடஒதுக்கீடு செய்யவேண்டும் என்று சென்னையை சேர்ந்த சஞ்சனா, அகிலா அண்ணா பூரணி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தனர். 


மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு 50% மேல் இருக்கக் கூடாது என கடந்த 1992-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 


இதனால், பொதுப் பிரிவு மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 69% இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.' எனவும் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2018-19 கல்வியாண்டில் 50% சதவீத இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தனர்.


இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். அப்துல் நஜீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதில், 69% இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான இடைக்கால மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.