கொரனோ இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் மூடப்பட்ட திறையரங்குகள், ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தீபாவளியன்று பல புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டால் நல்ல வசூல் கிடைக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர்களும் மிகவும் ஆவலுடன் உள்ளனர். நவம்பர் மாதம் முதல் பள்ளிகளை முழுமையாக திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்படும் சாத்தியம் உள்ளது என்றே அனைவரும் கருதுகின்றனர். 


கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் 1,303 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,79,568 ஆக உயர்ந்துள்ளது. 


Also Read | கொரோனா ஏற்பட Genetic Risk காரணமா? ஆய்வு சொல்லும் பகீர் தகவல்!


கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 13 பேர் உயிரிழந்தனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 35,796 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 35,796 ஆக உள்ளது.


தற்போது வார இறுதியில், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் டாஸ்மாக்  இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ |  அடுத்த 3 மாதங்களுக்கு கவனம் தேவை: எச்சரிக்கும் சுகாதாரச் செயலர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR