எனக்கு ஆயுள் தண்டனை கொடுத்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்பேன்; ஆனால், மன்னிப்பு மட்டும் கேட்க மாட்டேன் என வைகோ ஆவேசம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக ஆட்சிக் காலத்தில் வைகோவுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கானது சென்னை ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 


அப்போது தேசத்துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன்? என  செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் சற்று ஆவேசம் அடைந்த வைகோ, இவ்வாறு என்னிடம் கேள்வி கேட்பதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது என்றார். 


“மேல்முறையீட்டில் தண்டனை கொடுத்தால் ஏற்பேன். விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதால் ஆயுள் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன். இலங்கையில் இனப்படுகொலை செய்த ராஜபக்சே தப்பிக்க முடியாது” என்று வைகோ  கூறினார். மேலும், காங்கோவில் இனப்படுகொலையை நிகழ்த்திய அதிபருக்கு தண்டனை கிடைத்தது போல், ராஜபக்சேவுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்று கூறினார்.


தபால் துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பு குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்த வைகோ, எதிர்காலத்தில் தமிழர்கள் எந்த தேர்வையும் எழுத முடியாத நிலை ஏற்படும் என கவலை தெரிவித்தார். இந்தியாவை உடைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும், இதற்காக வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.