தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் தொடங்கியது. இந்தத் தேர்வு 3,119 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை,  8,83,882 பேர் எழுதினர். அதனைத் தொடர்ந்து ப்ளஸ் 1 தேர்வு முடிவுகளானது ஜூன் 27ஆம் தேதி வெளியானது. அதில், தேர்வு எழுதியவர்களில் 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக மாணவிகள் 94.99 சதவீதம் பேரும், மாணவர்கள் 84.86 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை - சென்னையில் சோகம்


இந்தச் சூழலில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்கு துணை தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வானது ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி முடிவடைந்தது.


மேலும் படிக்க | நாடு முழுவதும் நடைபயணம் செய்து காந்திய கொள்கையை பரப்பி வரும் கருப்பையா


இந்நிலையில் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான முடிவுகள் நாளை வெளியாக இருக்கிறது. மாணவ, மாணவிகள் நாளை பிற்பகல் 3 மணியிலிருந்து தங்களது ரிசல்ட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்  தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | தூத்துக்குடியில் அடுத்தடுத்து 23 சிறார்கள் - வெளியான அதிர்ச்சி பின்னணி !!


மேலும் படிக்க | காவல்துறையினர் கால்களை பிடித்துக்கொண்டு கதறி அழுத சகோதரிகள்: சேலத்தில் பரபரப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ