கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. முதல்முறையாக அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கம்ப்யூட்டர் வசதி செய்து கொடுக்கப்பட்டது. இதனிடையே, கொரோனா பரவல் விகிதம் குறைந்ததால் இந்தமுறை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை வழக்கம்போல் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பையும் சபாநாயகர் அறிவித்தார். கவர்னர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் அறிவித்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | புத்தாண்டை முன்னிட்டு இரவு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 147 வழக்குகள் பதிவு
 


அதற்கேற்ப கோட்டையிலும் எம்.எல்.ஏக்களுக்கு கம்ப்யூட்டர் வசதிகள் பொருத்தப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதால், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மீண்டும் கலைவாணர் அரங்கிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டார். 


ALSO READ |  பிரதமர் மோடியின் மதுரை வருகை பற்றி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து


அதன்படி, ஜனவரி 5 ஆம் தேதி கூடும் சட்டப்பேரவை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளார். அன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையைக் கூட்ட ஆளூநர் அழைப்பு விடுத்திருப்பதாகவும், அதன்படி சட்டப்பேரவைக் கூடும் என்றும் கூறியுள்ளார். இந்த அறிவிப்பையொட்டி பொதுப்பணித்துறை சார்பில் கலைவாணர் அரங்கை புதுப்பிக்கும் பணிகள் முடுக்கவிடப்பட்டுள்ளன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR