சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,542 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,08,748 ஆக அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 21 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 20 பேரும் தனியார் மருத்துவமனைகளில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.


தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 17,797ஆக உள்ளது. இன்றுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,835 ஆக அதிகரித்துள்ளது.  



தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 1,793 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இத்துடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 25,56,116 ஆக உயர்ந்துள்ளது. 


தமிழகத்தில் மொத்தம் 287 பரிசோதனை மையங்கள் உள்ளன. அவற்றில் இன்று மொத்தமாக 1,62,487 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இத்துடன் சேர்த்து தமிழகத்தில் மொத்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 4,16,90,759 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய பரிசோதனைகளில், 1.542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  


Also Read | Covaxin - Covishield கலந்து கொடுப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: ICMR


இன்றைய நிலவரம்: 
• இன்றைய பாதிப்பு - 1542


• இன்றைய மரணங்கள் -21


• மொத்த பாதிப்பு - 26,08,748


• இன்றைய டிஸ்சார்ஜ் - 1,793


• இன்றைய சோதனைகள் - 1,62,487 


Also Read | Covid Third Wave: மூன்றாம் அலையை தவிர்க்க சுலபமான வழிகள் உங்களுக்காக…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR