சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2652பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3104 .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிடால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக பதிவாகியுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. 


தற்போது தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 32,307 ஆக உள்ளது.  
இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் கோவிட் நோய்தொற்று பாதிப்பு 31,819 ஆக உள்ளது.



தமிழகத்தில் கோவிட்-19 பரிசோதனை மொத்தம் 272 இடங்களில் செய்யப்படுகின்றன. அதில் 203 தனியார் மற்றும் 69 அரசு மையங்கள் ஆகும்.


ALSO READ | கொரோனா 3வது அலை: அக்டோபா்-நவம்பா் மாதங்களில் உச்சம் அடையும்


சென்னையில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 165 பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து 52வது நாளாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.  


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே மாத இறுதியில் இருந்து நோய் தொற்று குறையத் தொடங்கியது. மே 30-ந் தேதியன்று தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது.


அதன்பிறகு ஜூன் மாதம் முதல் தினசரி பாதிப்பு குறைந்து கொண்டே வந்துள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததுடன், தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டது. இப்படி பல காரணங்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக சரிந்தது.  


Also Read | CORONA VACCINE போட்டுக்கொண்ட 3 நாட்களுக்கு உடலுறவு கூடாது – மருத்துவ வல்லுநர்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR