சென்னை: தமிழ்நாட்டில் வடமேற்கு பருவமழை பாதிப்பு அதிகமாகிவரும் நிலையில், கொரோனா பாதிப்பின் தாக்கம் சற்றுக் குறைந்து வருகிறது. இன்று மாநிலத்தில் 841 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றுவரை தமிழகத்தில் மொத்தம் 27,09,921 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 26,63,323 ஆக உயர்ந்துள்ளது. 


கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 126 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூவரும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மூவரும் என மொத்தம் 6 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் நோய்க்கு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தனர்.



இன்றைய பலி எண்ணிக்கையுடன் சேர்த்து  தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 36,226 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 10,372 ஆக உள்ளது.


தமிழகத்தில் அடைமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்திருக்கும் நிலையில் சென்னையில் கனமழையினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மழை பாதித்த பகுதிகளில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அதேபோல், எதிர்கட்சியினரும், பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.


Also Read | பருவமழையை எதிர்கொள்வதில் திமுக அரசு தோல்வி: குற்றம் சுமத்தும் எடப்பாடி பழனிச்சாமி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR