துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை பிரதமர் மோடியை சந்திக்க இன்றிரவு டெல்லி செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், பிரதமர் மோடியை சந்திக்க இயலவில்லை. இந்நிலையில் நாளை ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் இன்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அவருடன் அவரது ஆதரவாளர்கள் செல்கின்றனர்.


தமிழக துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் ஓ. பன்னீர்செல்வம் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதால் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த சாதிப்பு இருக்கும் என கருதப்படுகிறது.