தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை (South West Mansoon) தீவிரமடைந்திருப்பதை அடுத்து, பல மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மற்றும் கோவையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விடாது கனமழை பெய்து வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre, Chennai) எச்சரித்துள்ளது.


ALSO READ | செப்டம்பர் 6 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்


சென்னையை பொறுத்தவரை, அடுத்த 3 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


மேலும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால் வரும் 9ம் தேதி வரை, வரும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் ஏத்தாப்பூரில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றும் சென்னை வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | இடா புயல் எதிரொலி - சாலைகளில் கரை புரண்டோடும் வெள்ளம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR