சென்னை: நாளை நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வை 15 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நாளை நடக்கிறது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது. தேர்வு 300 மையங்களில் நடத்தப்படுகிறது. இதை எழுதுவோர் செல்லிடப்பேசி உள்ளிட்ட நவீன கருவிகளை எடுத்து வரக்கூடாது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.


தேர்வின் போது அரசு ஊழியர்கள் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. ஒவ்வொரு மையங்களுக்கும் வினாத்தாள்கள் பாதுகாப்பாக எப்படி கொண்டு செல்ல வேண்டும், பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.