ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், 'TET' எனும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். நிகழாண்டுக்கான தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்ரவரி, 28 ஆம் தேதி அறிவித்திருந்தது.  


இந்நிலையில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, மார்ச் 15ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கியது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 5ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஆன்லைன் விண்ணப்பத்தில் தொழில்நுட்பக் கோளாறுகளால் இடையூறு ஏற்பட்டதாக புகார்கள் வந்தன.


இதைத் தொடர்ந்து ஏப்ரல் 12ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.