மீனவப் பெருங்குடி மக்கள் தங்களின் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, 40 நாட்டு மீனவப் பிரதிநிதிகள் 21.11.1997 டில்லியில் கூடி, தங்களுக்கு எதிராக அரசுகள் கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் கடல் மாசுபடுவதால், மீன் வளம் குன்றி, வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகும் என்று, உலக அளவில் உரிமைக்குரல் கொடுத்துப் போராடித் தீர்வு கிடைத்த நாள் நவம்பர் 21, இந்த நாளைத் தான் உலக மீனவர்கள் தினமாக கொண்டடி வருகிறோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியக் கண்டம், 6086 கிலோ மீட்டர் கடற்கரையைக் கொண்டுள்ளது. இதில், தமிழகம் மட்டும் 1000 கிலோமீட்டர் கடற்கரையைக் கொண்டுள்ளது. கடலும் கடல் சார்ந்த வளங்களும், அங்குள்ள மக்களின் பண்பாடு, கலாச்சாரமே நெய்தல் நில நாகரிகம் ஆனது. 


கரையில் நிம்மதியைத் தொலைத்துவிட்டு, சொந்தங்களைக் கரை சேர்க்கக் கொந்தளிக்கும் கடலில் இரத்தமும் கண்ணீரும் சிந்திப் போராடுவதே கடலோடிகளின் அன்றாட வாழ்க்கை. 


கடலுக்குள் சென்றால், திரும்பி வர உயிருக்கும் என்பது உறுதி இல்லை. விவசாயிகளைப் போலவே, மீனவர்களும் வாழ்நாள் முழுமையும் கடலினில் களிக்கிறார்கள். 


எனவே, மீனவர்களின் உணர்வுகளை மதித்து இவர்களை வாழ்த்துவோம்.