தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் 3 விமான சேவை தொடங்கியது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துறைமுகத்தைப் பொறுத்த அளவில் இந்தியாவின் பத்தாவது மிகப்பெரிய துறைமுகமாக தூத்துக்குடி விளங்குகிறது. அனைத்து பருவ காலங்களிலும் செயல்படும் இந்த துறைமுகம், தமிழகத்தின் முக்கிய மீன்பிடி துறைமுகங்களில் ஒன்று. 


மீன்பிடி கப்பல்கள் மற்றும் உபகரணங்கள் தாயாரிப்பு மற்றும் பராமரிக்கும் துறைமுகம், சிறிய ரக சரக்கு கப்பல் கட்டும் துறைமுகம் என பன்முக பரிமாணங்களைக் கொண்டது இந்த தூத்துக்குடி துறைமுகம்.


இந்நிலையில், இந்தியாவின் பெரிய மற்றும் இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் முன்னனி விமான நிறுவனமான இண்டிகோ, தற்போது தூத்துக்குடி முதல் சென்னை வரையிலான விமான சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது.