கொரோனா பரவல் தாக்கத்தை குறைக்க மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  இந்த செயல்முறையானது கடந்த ஆண்டு ஜனவரி-16 லிருந்து தொடங்கியது.  முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.  பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது பரவி வரும் உருமாறிய தொற்று காரணமாக 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ஒமிக்ரான் எதிரொலி : இன்று முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை!


இதுகுறித்து கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையன்று இந்திய பிரதமர் மோடி உரையாற்றுகையில், கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியர் அனைவருக்கும் ஜனவரி-3ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும்.  அதனை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி-10ம் தேதிக்கு மேல் தொடங்கும்.  இந்த தடுப்பூசியானது முன்பை போலவே முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்கு செலுத்தப்படும்" என்று கூறினார்.


https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/vaccine.JPG


பிரதமரின் அறிவிப்புப்படி, 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் நிலையில் இதற்கான பதிவு நேற்றைய தினமே தொடங்கிவிட்ட்டது.  இதுகுறித்து மத்திய சுகாதார மந்திரி மன்கக் மாண்டுவியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக கோவின் தளத்தில் அதற்கான பதிவு தொடங்கியுள்ளது.  இந்த வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெற்றோர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.


இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி 30 நிமிடங்களுக்கு கண்காணிக்கப்பட்டு பின்னரே அனுப்பப்படுவர், அடுத்த டோஸ் 28 நாட்களுக்கு பின்னர் போடப்படும்.  இவர்களுக்கென்று தனியாக தடுப்பூசி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.  இதற்கு பதிவு செய்ய மொபைல், இணையதளம் போன்றவற்றில் கோவின் தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.  இதற்கு பதிவு செய்ய ஆதார் கார்டு, பள்ளி அடையாள அட்டை மற்றும் 10-ம் வகுப்பு சான்றிதழ் ஆகியவை தேவைப்படும்.


ALSO READ | தமிழகத்தில் கொரோனா 3வது அலை - அமைச்சர் சுப்பரமணியன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR