சென்னை: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீடிரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-


ஆண்டு தோறும் மேற்கொள்ளும் வழக்கமான மருத்துவமனை பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் பரிசோதனைகள் முடிவடைந்ததும் ஒரிரு நாட்களில் வீடு திரும்புவார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேமுதிக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜயகாந்தை சந்திக்க நேரில் வரவேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.