தமிழகத்தில் தொடர் மழை காரணமாகவும், மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாகவும் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ளது. 


விநாடிக்கு 1,266 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. எனவே அணையிலிருந்து விநாடிக்கு 225 கனஅடி தண்ணீர் இரைச்சல்பாலம் வழியே திறந்து விடப்பட்டு வருகிறது. 


கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு அணைகளிலும் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.