மேட்டூர் அணையின் நீர்வரத்து கணிசமாக உயர்த்து வருகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை எட்டியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக அனைத்து அணைகளிலும் நீர்வரத்து சற்று கணிசமாக உயர்ந்து வந்தது. எனினும் தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் அணைகளின் நீர்வரத்து குறைந்து வந்த நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை எட்டியுள்ளது.
 
இன்று காலை முதல் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரத்து 179 கனஅடி நீர் வருகிறது.


எனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.26 அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 700 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்தை விட, நீர் திறப்பு குறைவாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரவதாக தெரிகிறது.