தழகத்தில் இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக பதிவான வாக்குப்பதிவு 73.76 சதவீதம் ஆகும். வாக்குப்பதிவு முடிந்ததும் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு  5 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.


தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ள 68 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.


தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வீடியோவுடன் கூடிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும்போலீஸார், துணை ராணுவம் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார். 


அனைத்து கட்சி தலைவர்களும் மிகவும் பரபரப்புடன் காணப்படிகின்றன. சில தலைவர்கள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் காண ஏற்பாடிகள் செய்கின்றன.


இதேபோல புதுசேரியிலும் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதால் அங்கும் பரபரப்பான சூழ்நிலை காணப்படிகிறது.