தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன். 


அப்போது, அவர் கூறியதாவது...! 


விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் சாலைப்பணி மேற்கொள்ள கவனம் செலுத்த வேண்டும். குமரியில் துறைமுகப் பணிகள் தொடங்க தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். காவிரியில் நதிநீர் பங்கீட்டு தொடர்பாக கர்நாடக முதல்வரிடம் ஸ்டாலின் நேரில் வலியுறுத்த வேண்டும். 


இதையடுத்து, எஸ்.வி.சேகரை கைது செய்வதற்கு பாஜக தடையாக இல்லை;  எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன் என்பது பற்றி முதல்வர், டிஜிபியிடம் தான் கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் தமிழகத்தில் பாஜக ஆட்சியைக் கொண்டுவர முடியும் என்றும் அதிகாரிகள், காவல்துறையினர் அரசால் அச்சுறுத்தப்படுகின்றனர் என்றும் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.