தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் கல்லூரி மாணவி ஒருவரை, வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விழுப்புரம் அருகே உள்ளது பிடாகம் குச்சிபாளையம் கிராமம் இந்த கிராமத்தில் வசித்து வரும் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் வெற்றிச்செல்வன். இவர் வேலை எதுவும் செய்யாமல் அதே பகுதியில் மது போதையில் சுற்றி திரியும் நபர். வெற்றி செல்வன், அதே பகுதியில் உள்ள விழுப்புரம் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தவரும் மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். 


மாணவி கல்லூரிக்கு செல்லும் போதும் வரும் போது காதல் தொல்லை அளித்து வந்துள்ளார். இவரது ஒரு தலை காதல், திருமண ஆசை வரை சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் இவர், தனது பெற்றோரான வேலு மற்றும் பூங்கோதையுடன் பெண்ணின் வீட்டிற்கு தான் நேரில் சென்று பெண் கேட்டுள்ளார். இதற்கு கல்லூரி மாணவியின் பெற்றோர்கள் தனது மகள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள் மிகச் சிறிய வயது உடைய அவளை வயது அதிகமாக உள்ள வெற்றி செல்வனுக்கு திருமணம் செய்து கொடுக்க விருப்பமில்லை என தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | சென்னை தினமலர் அலுவலகத்தில் மலம் வீசிய தபெதிக!


இதனால் ஆத்திரமடைந்த வெற்றிச்செல்வன் இன்று காலை மாணவியின் பெற்றோர் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் மாணவி தனியாக இருக்கும் போது, வீட்டின் உள்ளே புகுந்துள்ளார். பின்னர், மாணவியை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார், இதில் மயக்கம் போட்டு கீழே சரிந்து விழுந்த மாணவியை கண்ட அவர் உயிரிழந்ததாக எண்ணி அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். 


இதனை தொடர்ந்து 100 நாள் வேலைக்குச் சென்று இருந்த மாணவியின் தாய் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மாணவியின் கழுத்து இருக்கப்பட்டு வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் ஆபத்தான நிலையில் கிடந்த அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் எடுத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து விழுப்புரத்தில் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் கல்லூரி மாணவியை கொலை செய்ய முயற்சி செய்து தப்பி ஓடி தலை மறைவாக உள்ள வெற்றி செல்வனை விழுப்புரம் தாலுகா போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 


திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பிடாகம் குச்சிப்பாளையம் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 


மேலும் படிக்க | மீனாட்சி மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 150 எம்பிபிஎஸ் இடங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ