அமெரிக்க விண்வெளி மையமான நாசா, முதல் கனரக விமான சோதனையாக ஹெலிகாப்டரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கயுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


செவ்வாய் கிரகத்திற்கு நாசா ஏற்கனவே ரோவர் அனுப்பி உள்ளது. இது செவ்வாய் மீது நகர்ந்து செல்லும் சிறிய வாகனம் ஆகும். இந்த ரோவர் அங்கு சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. இதன் வேகம் போதவில்லை என்பதால் கடந்த மே 5-ம் தேதி இன்சைட் ரோபோட் ஒன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. 


இந்நிலையில் தற்போது மற்றொரு புதிய முயற்சியாக நாசா ஹெலிகாப்டரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிவைக்கயுள்ளது. ஹெலிகாப்டரை சிறிய அளவில் வடிவமைத்து, அதன் எடையை 1.8 கிலோவாக குறைக்க வடிவமைப்பாளர்கள் குழு 4 ஆண்டுகள் உழைத்தது.


பூமியை விட 100 மடங்கு மெலிதான செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் பறக்க உகந்ததாக இந்த ஹெலிகாப்டரை வடிவமைத்துள்ளது.


நமது எதிர்கால அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளை உறுதி செய்ய இந்த ஹெலிகாப்டர் உதவ போகிறது என்று நாசா நிர்வாகி ஜிம் கூறியுள்ளார்.