தனிநபர் கணினி கண்காணிப்பு தொடர்பாக 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது தொடர்பாக உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டு அறிவிப்பு கடிதம் அனுப்பியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் உள்ள எந்தவொரு கணினி, கைபேசியின் இயக்கத்தினை கண்கானிக்க, தேவைப்பட்டால் பயன்படுத்த 10 அமைப்புகளுக்கு மத்திய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி குறித்து மத்திய அரசு 6 வாரத்திற்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


சமூக ஊடகங்களில், தனிநபர் கைபேசிகளில் இருக்கும் உரையாடல்களை முறையான அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தவோ, கண்காணிக்கவோ முடியாது. அவ்வாறு தகவல்களை கண்காணிப்பதும், கசியவிடுவதும் மிகப்பெறிய குற்றமாகும். 


இந்தநிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 20-ஆம் நாள் நாட்டில் உள்ள எந்தவொரு தனிநபர் தகவல்களை கண்காணிக்கவும், பயன்படுத்தவும், வேண்டுமென்றால் அவற்றில் மாற்றம் செய்யவும் 10 அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதற்காக தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு 69(1)-ன் கீழ் புதிய ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது. 


இந்த அறிவிப்பிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் இந்த முறைமைக்கு எதிரான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது இந்த இந்த அனுமதி குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மத்திய அரசின் ஆணையின் படி., கீழ்காணும் 10 அமைப்புகள் எந்த அனுமதி இல்லாமலும் யாரை வேண்டுமானாலும் உளவு பார்க்கலாம்...


  • Intelligence Bureau (உளவுத்துறை)

  • Narcotics Control Bureau (போதை பொருள் தடுப்பு பிரிவு)

  • Enforcement Directorate (அமலாக்க இயக்குநரகம்)

  • Central Board of Direct Taxes (வருவாய் புலனாய்வு அமைப்பு)

  • Directorate of Revenue Intelligence (நேரடி வரி விதிப்பு ஆணையம்)

  • Central Bureau of Investigation 

  • National Investigation Agency (தேசிய புலனாய்வு அமைப்பு)

  • Cabinet Secretariat(RAW) (கேபினட் செயலகம்)

  • Directorate of Signal Intelligence(For service areas of Jammu & Kashmir, North-East and Assam only) (சிக்னல் புலனாய்வு இயக்குநரகம்)

  • Commissioner of Police, Delhi (டெல்லி காவல் ஆணையர் அலுவலகம்)