டிவிட்டரில் கருத்து பதிவிடுவோர் இனி 280 எழுத்துக்கள் வரை அடிக்கலாம் என டிவிட்டர் அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து டிவிட்டரின் தலைமை நிர்வாகி தனது டிவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்:-


இது சிறிய அளவிலான மாற்றமாக இருந்தாலும் பலரிடமும் வரவேற்பை பெறும். கருத்து பதிவிடுவோர் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்புவோருக்கு 140 முதல் 160 எழுத்துக்கள் என்பது பெரிய பிரச்னையாக இருந்தது. இதனால் எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு, டிவிட்டர் குழுவால் சோதனை அடிப்படையில் 280 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 


மேலும் ஜப்பான், சீனா மற்றும் கொரிய மொழிகளிலும் பழைய எழுத்து முறை வரைமுறைகளை மாற்றி அமைக்க உள்ளதாகவும் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.