மிசாவில் தான் கைது செய்யப்பட்டது குறித்து சில நாட்களாக பொய்யான சர்ச்சை பரப்பப்பட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலத்தில் இன்று திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாழ்க்கை வரலாறு புத்தகமான “திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்” என்ற புத்தகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்த விழாவில் பேசிய ஸ்டாலின் கூறுகையில்; ‘மிசாவில் நான் கைது செய்யப்பட்டது குறித்து சில நாட்களாக பொய்யான சர்ச்சை பரப்பப்படுகிறது. நெருக்கடி நிலையை எதிர்த்த ஒரே கட்சி திமுக தான் என பெருமிதத்துடன் தெரிவித்தார். 


நான் மிசா சட்டத்தில் சிறையில் இருந்தேனா, இல்லையா என்பது மிக முக்கியமான விவாதமா? ஸ்டாலின் தி.மு.க.வை சேர்ந்தவரா என கேட்பது எப்படி முட்டாள்தனமானதோ, அதே போன்ற முட்டாள்தனமானதுதான் மிசா விவாதமும். மிசா சட்டத்தில் நான் மட்டுமா சிறையில் இருந்தேன்? தி.மு.க. தலைவர்கள் பலரும் பல்வேறு சிறைகளில் இருந்தனர். மிசாவில் நான் சிறையில் இருந்தது தொடர்பாக கடந்த சில நாட்களாக பல பொய்யான சர்ச்சைகள் பரப்பப்படுகிறது. 


நெருக்கடி நிலையை எதிர்த்த ஒரே கட்சி தி.மு.க. தான். ஆட்சி கலைந்தாலும் நெருக்கடி நிலையை ஆதுரிக்க மாட்டேன் என கூறியவர் கருணாநிதி. தி.மு.க. குடும்ப அரசியல் செய்வதாக கூறுகிறார்கள். குடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் தி.மு.க. தி.மு.க.வில் உள்ளவர்கள் கழகத்திற்காக குடும்பம் குடும்பமாக உழைத்தார்கள். தற்போது நடைபெறும் ஆட்சியின் காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு மீதமுள்ளது. அதனால் நாம் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்றார். ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று கருணாநிதி நெருக்கடி நிலையை எதிர்த்தார், என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.