மத்திய வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றும், கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி ஆந்திராவில் உள்ளது. இதன் காரணமாக மும்பை, கேரளா பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளா, லட்சத்தீவு மீனவர்கள் அரபிக் கடல் மற்றும் கொங்கன் கோவா கடற்பரப்பில் ஜூன் 8 முதல் 12-ந் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, மத்திய அரபிக் கடல், கர்நாடக கடலோர பகுதிகள், கர்நாடகாவின் தெற்கு உள் மாவட்டங்கள், கோவா மற்றும் கர்நாடகாவின் வடக்கு உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும். மகாராஷ்டிரா கடலோர பகுதிகள், கோவா தென்மேற்கு பருவமழை மிக தீவிரமாக இருக்கும்.


அதேபோன்று தமிழகத்திலும் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும். தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. விரிஞ்சிபுரம், கேளம்பாக்கம், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., அரிமளம், செய்யாறு, காஞ்சீபுரத்தில் 6 செ.மீ., ஆலங்குடி, செம்பரம்பாக்கத்தில் தலா 5 செ.மீ., சென்னை, அரியலூர், வந்தவாசி, தேவக்கோட்டை, நிலக்கோட்டை, சென்னை விமானநிலையம், டி.ஜி.பி. அலுவலகம், திருப்பத்தூர், குமாரபாளையம், திருவாலங்காடு, கடலூர், செய்யூர், காட்டுக்குப்பத்தில் தலா 3 செ.மீ. மழையும் பெய்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.