பிரதமர் மோடி மற்றும் முன்னாள் அமைச்சர் அத்வானி ஆகியோருக்குக் கொலை மிரட்டல் விடுப்பது போன்ற வாட்ஸ்அப் ஆடியோ ஒன்று கோவையில் கடந்த சில நாள்களாக பரவி வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வாட்ஸ்அப் ஆடியோ ரபீக் என்பவர் பிரகாஷ் என்பவரிடம் பேசும்போது...!


நாங்கள் பிரதமர் மோடியைக் கொல்லனும்னு முடிவு செய்துள்ளோம். 


அத்வானி வந்தபோது கோவையில் குண்டு வைத்தது நாங்கள்தான் என பேசியிருந்தார். 


இந்த ஆடியோ குறித்து தனிப்படை அமைத்து கோவை போலீஸார், ரபீக்கைக் கைது செய்த குனியமுத்தூர் போலீஸார், காவல்நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இவர், ஏற்கெனவே கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பின்னர் விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.