ஜம்முகாஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுமிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


சிறுமிக்கு மயக்க மருத்து கொடுத்து அறையினுள் அடைத்து வைத்து 3 நாட்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.


பின்னர், சிறுமி உயிரிழந்ததும் காட்டுப் பகுதியில் உடலை தூக்கி வீசி எறிந்துள்ளனர்.


இந்த,கொடூர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


இந்த வழக்கு தொடர்பாக 3 போலீஸார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையில், கத்துவா சிறுமி பாலியல் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க பார்கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. 


உச்சநீதிமன்றத்தில் பார்கவுன்சில் தாக்கல் செய்த அறிக்கை தொடர்பாக விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.