நிரந்தரத் தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தத்தை எதிர்த்து கேரளாவில் இன்று முழு கடை அடைப்பு போராட்டம்!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிரந்தரத் தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 


பா.ஜ.க தொழிற்சங்கம் தவிர அனைத்து தொழிற்சங்கங்களும் 24 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதை தொடர்ந்து கேரளாவில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.


இந்த முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி கேரளாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக கன்னியாகுமாரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு செல்லும் தமிழக பஸ்கள் அனைத்தும் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.