தலைநகர் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கமானது டெல்லியை தவிர ஜம்மு – காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் 6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்தவர்கள் வெளியேறி சாலைக்கு வந்தனர். பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்பட வில்லை.


ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து டெல்லி, காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல் உள்ளிட்ட வடமாநிலங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.