திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் தோட்டா தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை தொழிலாளர்கள் வேலைக்கு சென்றபோது, திடீரென வெடி மருந்து குடோன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்தது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் ஆங்காங்கே உடல் சிதறிய நிலையில் பிணமாகக் கிடந்தனர். வெடிமருந்து வெடித்து தீப்பிடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. சிலர் உடல் அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைந்து கிடந்தது. இந்த வெடிவிபத்தில் தொழிற்சாலைக்குள் இருந்த 10 தொழிலாளர்கள் பலியாகி இருக்கலாம் என தகவல் வந்துள்ளது.


இதுபற்றி தகவல் அறிந்த 25 தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.