தூத்துக்குடி எஸ்.பி மற்றும் மாவட்ட ஆட்சியரை பணியிடம் மாற்ற தமிழக அரசு உத்தரவு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 10 உயிரிழந்துள்ளனர். 


இதை தொடர்ந்து இன்றும் இரண்டு முறை காவல் துறையினருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில், மேலும் ஒருவர் உயிரிழந்தார். மூன்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 


இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் பணியிட மாற்றம். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக இடமாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..!