ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ரத்தினம்மாள், வல்லம்மாள் என்ற இரண்டு மூதாட்டிகள் தலையில் கல்லால் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் இரண்டு மூதாட்டிகள் கொலைகள் ஒரே நேரத்தில் நடந்ததை அடுத்து, சித்தூர் மாவட்ட எஸ்.பி ராஜசேகரபிரபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசாரின் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  


விசாரணையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முனுசாமி என்பவர் இரவில் தனியாக இருக்கும் வயதான பெண்களை கொன்று கொள்ளையடித்து வந்தார். பகலில் மனநலம் பாதித்தவர் போல ஊர் ஊராக நடந்தே சுற்றி வந்தார். பெட்ரோல் பங்க் கேமராவில் பதிவான உருவத்தை வைத்து முனுசாமியை ஆந்திர காவல்துறையினர் பிடித்துள்ளனர்.


பின்னர், முனுசாமியின் கைரேகையும், கொலை செய்யப்பட்ட இடங்களில் சேகரித்த கைரேகையும் ஒத்துப்போனது என்று ஆந்திர காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.