ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலை தாக்குதலில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ஷியா மக்கள் வழிபடும் மசூதியில் நேற்று நடைபெற்ற தொழுகையின் போது, திடீரென தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். 


இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


இதுகுறித்து காபூல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.