கராச்சி நகரில் ஞாயிற்றுக்கிழமை விஷ வாயு தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் கராச்சி நகர் அமைந்துள்ளது. இங்கு விஷ வாயு தாக்கி சுவாசப் பிரச்னை ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். மயக்கமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 


இந்த சம்பவம் தொடர்பான காரணம் இன்னும் போலீஸாரால் கண்டறியப்படவில்லை. கியாமரி ஜெட்டி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சரக்குக் கப்பலில் இருந்து ரசாயனங்களை வெளியேற்றும் போது, விஷ வாயு கசிந்திருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என்று ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.