தைபே: தைவானின் தெற்கு நகரமான காவ்ஸியூங்கில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் கொல்லப்பட்டனர், 41 பேர் காயமடைந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஹ்சியூங்கின் யாஞ்செங் மாவட்டத்தில் உள்ள 40 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் நள்ளிரவு கடந்து அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. விடிந்து சில மணி நேரத்திற்குப் பிறகு தீ (Fire Accident) கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது.


காவோஷியங் தீயணைப்புத் துறை ஒரு அறிக்கையில், கட்டிடத்தில் மெற்கொள்ளப்பட்ட தெடுதல் நடவடிக்கையில், 46 பேர் இறந்ததை உறுதிப்படுத்த முடிந்ததாகக் கூறியுள்ளது. 


இப்பகுதியின் மேயர் சென் சி-மாய் இந்த கட்டிடத்தின் பெரும் பகுதிகளில் பலர் வசிக்கவில்லை என்று கூறினார். அதனால் பெரிய அளவிலான உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


ALSO READ: பெங்களூரு அபார்ட்மெண்டில் கேஸ் வெடித்து தாயும் மகளும் பலி



இந்த கட்டிடத்தில் முன்னர் உணவகங்கள், கரோக்கி ஓய்வறைகள் மற்றும் ஒரு திரையரங்கம் ஆகியவை இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. 



பலரது உயிர்களை பலிவாங்கிய இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து குழு அமைத்து தைவான் (Taiwan) அரசு ஆராய்ந்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


ALSO READ: Watch: துபாய் துறைமுகத்தில் குண்டுவெடிப்பு: தீவிரவாத தாக்குதலா? போலீஸ் தீவிர விசாரணை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR