ஈரானில் உள்ள கெர்மான் மாகாணத்தில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக, கெர்மான் நகரில் உள்ள கட்டிடங்கள் பயங்கரமாக அசைந்தது. பொதுமக்கள் பயத்தில் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் குவிந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் உணரப்பட்டதாக தகவல் வெளியானது. 


கெர்மனை சுற்றியுள்ள பகுதிகளிலும் 5.0 என்ற அளவுக்கு  நிலநடுக்கத்தின் பின் அதிர்வுகள் உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.