நிலவில் ரயில் விட முடியுமா? ஆம் என்றது நாசா. இது கற்பனை அல்ல. உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆய்வு மையங்கள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி பல்வேறு வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்கா இன்னும் ஒரு படி மேலே சென்று அங்கு ரயில்களை இயக்க விரும்புகிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சந்திரனில் முதல் ரயில் அமைப்பை உருவாக்குவதற்கான வரைபடத்தை உருவாக்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிலவில் மனிதர்களுக்கான மனித காலனியை அமைக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. நிலவில் உள்ள விண்வெளி மையத்தின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான ரோபோ போக்குவரத்து அமைப்பு தயாரிக்கப்படும் என நாசா கூறியுள்ளது. 2030ம் ஆண்டிற்குள் நிலவில் ஒரு ரயில்வே தளத்தை உருவாக்க அமெரிக்கா இலக்கு வைத்துள்ளது. 


நிலவில் ஓடும் ரயில் பூமியில் உள்ள ரயிலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இதற்காக பிரத்யேக டிராக் தயார் செய்யப்படும். நாசா இதற்கு Flexible Levitation on a Track (FLOAT) என்று பெயரிட்டுள்ளது. இது ஒரு அறிவியல் புனைகதை திரைப்படமாகத் தோன்றலாம். ஆனால் சில வருடங்களில் இது நிஜமாகலாம். நாசாவின் வலைப்பதிவு ஒன்றில், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் ரோபோடிக்ஸ் பொறியாளர் எதெல் ஸ்க்லர், நிலவில் ரயில் திட்டம் பற்றிய தகவலை வழங்கியுள்ளார்.


சந்திரனில் ரயில் விட FLOAT அமைப்பு


NASA ஆரம்ப வடிவமைப்பு குறித்த தகவல்களை வழங்கியுள்ளது. FLOAT அமைப்பில்,  3-அடுக்கு படத் தடத்திற்கு மேலே காற்றில் பறக்கும் காந்த ரோபோக்களைக் கொண்டிருக்கும். இந்த பாதையில் கிராஃபைட் அடுக்கு இருக்கும். இது ரோபோக்களை டயாமேக்னடிக் லெவிடேஷன் மூலம் மிதக்கச் செய்யும். இரண்டாவது அடுக்கு ஃப்ளெக்ஸ்-சர்க்யூட்டாக இருக்கும், இது மின்காந்த உந்துதலை உருவாக்கும், இதனால் ரோபோக்கள் முன்னோக்கி செல்ல இயலும். சூரிய ஒளியில் இருந்து சக்தியை உருவாக்கும் சோலார் பேனலின் மெல்லிய அடுக்கு இருக்கும். FLOAT ரோபோக்களில் நகரும் பாகங்கள் எதுவும் இருக்காது. அவை பாதைக்கு மேலே பறக்கும். இதனால் சந்திர மேற்பரப்பு காரணமாக ரோபோக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது.


மேலும் படிக்க | இன்ஸ்டா பதிவால் கொலையான மாடல் அழகி... உணவகத்தில் துப்பாக்கிச்சூடு - ஷாக் தரும் பின்னணி!


ரோபோக்களில் வண்டிகள் பொருத்தப்படும் என தெரிவித்துள்ள நாசா,  அவற்றின் வேகம் மணிக்கு 1.61 கிலோமீட்டராக இருக்கும் என கூறியுள்ளது. நாசாவின் எதிர்கால தளத்திலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 100 டன் பொருட்களை ரோபோக்களால் எடுத்துச் செல்ல முடியும்.  நிலவின் தூசி நிறைந்த, கடுமையான சூழலில் குறைந்த தள தயாரிப்புடன் FLOAT தன்னாட்சி முறையில் செயல்படும் என்று நாசா கூறியது.


ஆர்ட்டெமிஸ் மிஷன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்குள் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா விரும்புகிறது. எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு நிலவில் நிரந்தர தளத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.


மேலும் படிக்க | வரலாறு காணாத மழை! 90 பேரை காவு வாங்கிய வெள்ளம்..கதறும் மக்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ