ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் தொண்டு நிறுவனம் மீது தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இச்சம்பவம் பற்றி டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-  இந்த சம்பவத்தில் 10 வெளிநாட்டினர் உள்பட 42 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்ற தகவலையும் அவர் உறுதி செய்துள்ளார்.