வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று லாஸ் வேகாஸுக்கு வருகை புரிகிறார். இந்த பயனத்தின் போது, கடந்த ஞாயிறு அன்று நடைப்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் சேதம் அடைந்த பகுதிகளை சீரமைப்பு செய்வதற்கான பணிகளை திட்டமிடும் நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப் படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக அமெரிக்கா, லாஸ் வேகாஸ் நகரில் கேசினோ ஓட்டல் ஒன்றில் கடந்த ஞாயிறு இரவு நடைப்பெற்ற கச்சேரி கூட்டத்தினில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடிரென துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியதில் 59 பேர் பலியாகியுள்ளனர், 500-க்கும் அதிகமானவர் காயமடைந்துள்ளனர்.


சம்பவத்தின் போது, துப்பாக்கிசுடும் சத்தம் கேட்டதும் அங்கு கூடியிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். 


தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 


அமெரிக்கா மட்டும் இல்லாமல் உலக மக்கள் அனைவரது கவனத்தை ஈர்த்த இச்சம்பவத்தில் 64 வயதான ஸ்டீஃபன் பாட்கோக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.