லண்டனில் 27 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்கு லண்டன் லதிமேர் சாலையில் உள்ள  கிரன்பெல் டவரில் பயங்கர தீவிபத்து நடந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் 27 மாடி கட்டிடத்தில் 2-வது தளத்தில் பிடித்த தீ அனைத்து தளங்களுக்கும் பரவி வருகிறது. தீயை அணைக்க 40 தீயணைப்பு வாகனங்கள், 200 வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.


இந்த தீ விபத்தில் இதுவரை 2 பேர் காயமடைந்துள்ளனர். கட்டிடத்தில் உள்ள 120 வீடுகளில் வசித்து வருபவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. 


மேலும் புகை மூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்ட இருவர் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தீ விபத்திற்கு தற்போது வரை காரணம் தெரியவில்லை என்ற போதிலும், இதில் தீவிரவாதிகளின் சதி இருக்குமோ என்று அஞ்சப்படுகிறது.


கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.