துருக்கி:துருக்கி நாட்டின் ஹடாய் மாகாணம் இஸ்ஹெண்டிரூன் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹசிம் ஒசன் செடிக் (23) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த பெர்பின் ஒசிக் (20) என்கிற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.  வழக்கம்போல காதலர்களுக்குள் ஏற்படும் சண்டை போல இவர்களுக்குள்ளும் அடிக்கடி சிறிய சண்டைகள் ஏற்பட்டுள்ளது.  கடந்த 2019-ல் இவர்கள் இருவருக்கும் நடந்த சிறிய சண்டை பெரியதாக மாறி பிரேக்கப் வரை சென்றது. இதனையடுத்து பெர்பின் ஒசிக், ஹசிமுடனான உறவை முறித்துக் கொண்டார்.  காதலி தன்னை விட்டு பிரிந்த ஆத்திரத்தில் ஹசிம், ஒசிக் மீது ஆசிட்டை ஊற்றிவிட்டார்.  இதில் ஒசிக் உடலில் பெரும்பாலான இடத்தில் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | இனிமே யானையை பார்க்கும்போது இதையெல்லாம் நியாபகத்துல வெச்சுக்கோங்க!


பினர் ஒசிக் தனது இந்த மோசமான நிலைக்கு காரணம் தனது காதலன் ஹசிம் தான் என்று வாக்குமூலம் அளித்தார்.  அதன் பேரில் போலீஸார் ஹசிமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  அங்கு அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.  அதனை தொடர்ந்து சிறையில் இருந்த ஹசிம் தனது தவறை உணர்ந்து காதலியான பெர்பின் ஒசிக்கிற்கு மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதினார்.  அவரின் கடிதத்திற்கு ஒசிக் பதில் கடிதம் எழுதினார்.  இப்படியே இவர்கள் இருவரும் மாறி மாறி கடிதங்களை எழுதி பரிமாறிக் கொண்டு வந்தனர். இது மீண்டும் இவர்களது பழைய காதலை புதுப்பிக்க செய்தது.



மேலும் தனி அறை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த ஹசிம் தண்டனைக்காலம் முடிவடைந்தத பின்னர் திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.  கொரோனா பரவல் காரணமாக திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை 2022 மே 31-வரை ஜாமீனில் விடுதலை செய்ய துருக்கி அரசு அனுமதியளித்தது. இந்த உத்தரவால் சிறையில் இருந்த ஹசிம் ஜாமினில் வெளியே வந்தார்.



சிறையிலிருந்து ஹசிம் வெளியே வந்ததும்,பெர்பினும்-ஹசிமும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்து ஒசிக் கூறுகையில், "நான்கு சுவர்களுக்கு இடையில் அவர் அடைத்திருந்தது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.  நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பல கடிதங்களில் எழுதினோம்.  அவருக்கு நான் என்னை முழுவதுமாக கொடுத்துவிட்டேன்.  அவர் என்னை மிகவும் நேசிக்கிறார், நானும் ஆறு அதிகமாக நேசிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.


ALSO READ | ஒமிக்ரான் வைரஸை தடுக்க 4-வது பூஸ்டர் டோஸ் !


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR