லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் வசித்து வருகிறார். இந்த அரண்மனை உச்சக்கட்ட பாதுகாப்பு பகுதியில் அமைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று முன்தினம் மாலை இந்த அரண்மனை மதில் சுவரில் ஒரு இளைஞர் அத்துமீறி ஏற முயன்றார். இதுபற்றி தெரியவந்த 3 நிமிடங்களில் அவரை லண்டன் மாநகர போலீசின் அரண்மனை பாதுகாப்பு சிறப்பு படையினர் கைது செய்தனர்.


இதுகுறித்து போலீசார் விடுத்துள்ள அறிக்கையில், அரண்மனை சுவரில் ஏற முயன்ற இளைஞரை கைது செய்துள்ளோம். அவரிடம் சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் ஆயுதங்கள் எதுவும் இல்லை என கூறப்பட்டுள்ளது.