துபாய்: மேக்கப் சாதனங்களை பயன்படுத்தி ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட கணவர் மனைவியை விவகாரத்து செய்தார்.


துபாயை சேர்ந்த 34 வயதுடைய நபர் 28 வயதுடைய பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தம்பதிகள் இருவரும் சார்ஜாவில் உள்ள அல் மம்ஜார் கடற்கரைக்கு குளிக்க சென்றனர். கடல் நீரில் இருவரும் நீச்சலடித்து குளித்துள்ளானர்.
அப்போது மனைவியின் உண்மையான முகத்தை பார்த்த கணவன் அதிர்ச்சி அடைந்தார். திருமணத்தின் போது இருந்ததை போல் தனது மனைவி அழகாக இல்லை என்றும் அதிகப்படியான மேக்கப் செய்து தன்னை ஏமாற்றியதற்காகவும் மனைவியை விவாகரத்து செய்தார்.